அரசு நிர்வாகம் பற்றி புறம் கூறும் கருத்துகள்

அரசு நிர்வாகத்திற்கு உதவக்கூடிய புறநானூறு கூறும் செய்திகள் பற்றிய கட்டுரை




அரசரும் அரசியும் சதுரங்கப் போர்க்களத்தில் வீற்றிருத்தல்

 அறிமுகம் 

 மனிதன் நாடோடியாக அலைந்து குடிகளாக வாழ ஆரம்பித்தவுடன்அவன் உடைமைகளுக்குப் பாதுகாப்பு தர ஒரு தலைவன் தேவைப்பட்டான்அதுவே அரசியலின் முன்னுரைக்காலமாகும்அரசியல் இயற்கையைப்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் தான் ஆளும் முறைக்கான தேர்ந்தெடுப்பை நிகழ்த்துகிறதுஒரு காலத்தில் அதற்கு முடி சூடிய அரசர்கள் தேவைப்பட்டனர்போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் கொல்லச் செய்தது அக்கால அரசியல்.

பிறகு இக்காலத்தில் அது மக்களாட்சியை விரும்புகிறதுஒரே உடலின் இருவேறு உறுப்புகள் தங்களுக்குள் தாங்களே கட்டளையிட்டுக் கொண்டு ஓர் அழகிய ஓவியத்தை உருவாக்குகின்றனஅதுபோல்ஒரே நாட்டைச் சார்த்தோர் தங்களுக்குள் தாங்களே கோரிக்கையும் வைத்துக்கொண்டுஅதை நிராகரித்தும்நடைமுறைப்படுத்தியும் எய்தப்படும் அரசியல் ஓவியமாக இன்று மக்களாட்சி நம் கண் முன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

அதற்கும் போதிய அளவில் அறிவுரைகளை முடியாட்சி காலத்தில் உருப்பெற்ற நமது புறநானூறு, என்னவெல்லாம் வழங்குகிறது என்பதைக் கூறுவதாக இந்தக்  கட்டுரை அமைகிறது .இதன் தலையாய நோக்கமே மக்களை வழிநடத்தும் ஒரு மன்னனின் உத்திகளைப் புரிந்துகொள்வதாகவே அமைந்துள்ளதுஅது இன்றளவும் நம்மை நாமே ஆண்டுகொண்டிருக்கும் போதும் பயன்படுகிறது என்பதுதான் நாம் அறிந்துகொள்ளவேண்டியுள்ளது.

 

புறநானூறும் அரசியலும் 

புறநானூறு அரசு நிர்வாக வழிகாட்டியாக இருத்தல்


புறநானூறு என்பது சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்றுகடவுள் வாழ்த்தோடு சேர்த்து மொத்தம் நானூறு பாடல்களைக் கொண்டது. 157 புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் இதில் உண்டுஅதில் 18 பெண்பாற் புலவர்களும் அடக்கம்நான்கு முதல் நாற்பது வரையிலான அடியெல்லையைக் கொண்டதுபாவகை என்பது சங்க இலக்கியங்களுக்கு உரித்தான ஆசிரியப்பாவாகும்.

 பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.இதனைத் தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் எனவும் கூறுவர்புறம் என்று பெயரிலேயே வந்ததால் இதன் பாடுபொருள் புறம் சார்ந்தது என்பது தெளிவுசங்க இலக்கியப் புற நூல்களில் பல மன்னர்களைப்பற்றிப்  பெருவாரியான செய்திகளைச் சுமந்திருக்கும் நூல் இதுவேபதிற்றுப்பத்து சேரர்களை மட்டும் பாடுகிறதுஆதலால்மூவேந்தர்கள்சிற்றரசர்கள்புகழ்பெற்ற புலவர்கள் என அனைவரின் வரலாற்றுக்  குறிப்பாக இந்நூல் அமைந்துள்ளது 

        மற்ற அற நூல்கள் வாழ்வியல் நெறிகளை எடுத்துரைப்பனவாக உள்ளனஅக நூல்களும் தமிழர்களின் இன்ப வாழ்க்கையோடு இன்னும் பிற செய்திகளைக் கூறுகின்றனபுறநூல்களில்குறிப்பாகப் புறநானூற்றில் புலவர்கள் மன்னனை வாழ்த்தியும்அறிவுரை கூறியும்புகழ்ந்தும்சினந்தும் பல பாடல்களைப் பாடியுள்ளனர்அக்கால முடியாட்சிக்குத் தேவையான கருத்துக்களையோசனைகளைக் கூறினார்கள்.

                " சங்க காலத்தில் தமிழக ஆட்சி முடியாட்சி எனினும் குடியாட்சி போன்ற சிறப்புடன் இருந்தது."                                          - து. - (19)

என்ற வரிகள் சங்க காலத்து அரசியல் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. அது இன்றும் மக்களாட்சி நடைபெறும் நாளிலும் உதவுகிறது என்பது தான் நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளதுஅதை அவர்களின் பாடல்கள் வழியே ஒவ்வொரு யோசனைகளாக  இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.

 

நிலமும் நீரும் 

நிலமும் நீரும் சம அளவு இருக்கும் காட்சி
      

  உலகத்தை மண்ணுலகம் எனக் கூறுவது மரபுநமக்குப் புலப்படும் உலகம் மண்ணால் போர்த்தப்பட்டதுஅது உலகின் தேகமாகவும்நெடுந்தோலாகவும் விளங்குகிறதுஅந்த மண் தான்  ஒரு நாட்டின் வளத்தைசெழிப்பை மட்டுமல்லாது, அந்நாட்டு அரசனின் செங்கோன்மையையும் தீர்மானிக்கிறதுநாட்டின் நல்லாட்சியை நிலவளம் காட்டிவிடுகிறதுநிலவளத்தின் செம்மையை நீர்வளம் காட்டிவிடுகிறதுஎனவே நல்லாட்சி-நிலம்-நீர் என்னும் மூன்றும், நாடு என்னும் முக்கோணத்தின் மூன்று முனைகளாகும்நீர்வளத்தையும்நிலவளத்தினையும் பெருக்கியவர்கள் மக்கள் வளத்தையும் பெருக்குவார்கள் என குடபுலவியனார் கூறுகிறார்இச்செய்தியை,

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு 

              உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;

              ...   ...   ...   ...   ...

              நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருட்க"                     - புறம் 18(22-23, 28)

என்ற வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

           நற்றிணையில் முதல் பாடலிலேயே தலைவி ஒருத்தி நீர் இல்லையானால் உலகம் இயங்காது என்று கூறுகிறாள்.

          " நீரின் றமையா உலகம் போல "                                             நற். 1(6-7)

என்ற வரிகள் மூலம் நீரின் முக்கியத்துவத்தை உணரலாம்வள்ளுவரும் நீரின் இன்றியமையாமை உணர்ந்து அதைக்  கடவுள் வாழ்த்திற்கு அடுத்த அதிகாரமாக வைத்துள்ளது இங்கு உற்றுணரத்தக்கதுநீர் இல்லாமல் உலகில் ஒரு காரியமும் நடக்காது.வாய்க்கால்கள்குளங்கள்அணைகள் என எல்லாம் இருந்தாலும் மழை இல்லாமல் போனால் அந்த நீரும் கிடைக்காது என்பதை,

           "நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் 

            வானின் றமையை தொழுக்கு"                                               - குறள் 20

என்ற இந்தக் குறட்பாவின்வழி நம் அறிந்துகொள்ளலாம்.

 

நீதி வழுவா நடுநிலைமை 

துலாக்கோல் சமமாக இருத்தல்


  பாரபட்சம் இன்றி பொருள் படைத்தோர்இல்லாதோர்என அனைவருக்கும் நீதி வழங்குவதை ஒரு நல்ல ஆட்சியாளன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்அவன் வழங்கும் நீதி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் எனப் புறநானூறு கூறுவதைக் காணலாம்தராசு எனப்படும் துலாக்கோல் வணிகம் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகைக் கருவிஇரண்டு தட்டுகளைக் கொண்டிருக்கும் இதில் எந்த வகையான பொருட்களையோபண்டங்களையோபூக்களையோ வைத்தாலும் இரண்டு தட்டுகளிலும் உள்ள திடப்பொருட்களின் எடை சமமாக உள்ளதா என்பதைப் பார்த்துமேல்நோக்கிய தனது நாக்கின் வழிகீழிருக்கும் எடை குறித்த உண்மையைச் சொல்லும்.

                நீதித்துறையிலும் துலாக்கோலின் குறியீடு கவனிக்கத்தக்கதாய் இருக்கிறதுஎதிரில் குற்றவாளியாக நிற்பவர் எவராக இருந்தாலும்துலாக்கோலின் நாக்கினைப்போல் நடுநிலையான முடிவை ஓர் அரசன் கொடுக்க வேண்டும் என்பதைக் காரி கிழார் பாடல் வழி நாம் அறியலாம்.

          " தெரிகோல் ஞமன் போல ஒருதிறம் 

            பற்றல்  இலியரோநின்திறம் சிறக்க!"                                    -     புறம். 6(9-16)

என  இடம்பெறும் இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியலாம்மதுரைக்காஞ்சியும் கிட்டத்தட்ட இதே கருத்தை முன்வைக்கிறது.

         ஞெமன் கோலன்ன செம்மைத்து ஆகி 

            சிறந்த கொள்கை அறங்கூறு "                                                      -   மது.கா 491-492

என்ற இந்த வரிகளும் துலாக்கோலைக் குறிக்கின்றன.

                   மக்கள் தன்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை ஓர் ஆட்சியாளன் உணர்வானென்றால்தன்னுடைய பெருங்கடமையே நீதி வழுவாத செங்கோல் என்பதை அறிவானானால்அவனால் குற்றம் நடப்பதைப் பார்த்துப் பொறுத்துக்கொண்டு இருக்க இயலாதுஅவனுடைய கடமை குற்றம் கடிதல் என்கிறார் வள்ளுவ பெருமான்இச்செய்தியை,

          குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்   

            வடுவன்று வேந்தன் தொழில்"                                                     -  குறள் 549

என்ற இந்த குறட்பா வழி நாம் அறிந்து கொள்ளலாம்.  

         

அமைச்சர்கள் 

அமைச்சர்கள் அரசனுக்குத் துணையாக இருத்தல்


 அரசியலைப் பொறுத்த வரையில் ஆலோசனைகளைக் கொடுக்க அமைச்சர்கள் மிகவும் முக்கியமானவர்கள்அரசனால் எடுக்க முடியாதகுழப்பம் தரக் கூடிய விடயங்கள் பற்றியும் தனது முடிவு சரியானதா என்ற சரிபார்ப்பிற்கும் ஓர் ஆட்சியாளன் அமைச்சர்களை நாடுகிறான்எந்தமாதிரியான அமைச்சர்களை அவையில் அமர்த்தியாகவேண்டும் என்பதைப் புறப்பாட்டு நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறதுஇனிய சுவையைத் தரும் பால் புளித்தாலும்பகற்பொழுது தன்னிலையிலிருந்து திரிந்தாலும்நான்கு வகையான வேதத்தின் நெறிகள் திரிந்தாலும் தங்கள் நிலையிலிருந்து திரியாத அமைச்சர்களோடு வாழவேண்டும் என்ற வழிமுறையை,

            " பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் 

              நாஅல்  வேதநெறி திரியினும் 

              திரியாச் சுற்றமொடு முதுசேண் விளங்கி 

              நடுக்கின்றி நிலியரோ அத்தை"                                                 - புறம் 2(17-20)

என்ற இந்த வரிகள் மூலம் முரஞ்சியூர் முடிநாகராயர் கூறுகிறார்அமைச்சர்களின் இன்றியமையாமையை நாம் இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

           முப்பால் வழங்கிய முதற்பாவலரோ 'அமைச்சுஎன்ற தனியொரு அதிகாரத்தையே இயற்றியுள்ளார்இதன் மூலமே வள்ளுவரும் அமைச்சர்களுக்கு அரசியலில் முக்கியமான இடம் கொடுத்துள்ளமை புலப்படுகிறதுஅரசியலுக்குப் பொறுப்பாளி அரசனைவிடஆட்சியாளனைவிட மந்திரிகளே என்கிறார்அரசன் அறியாதவனாக இருந்தாலும்அவனுக்கு நல்ல பல ஆலோசனைகளைச் சொல்ல வேண்டியது அனைத்து அமைச்சர்களின் கடமை என்பதை,

          " அறிகொன்று அறியான் எனினும் உறுதி 

            உழையிருந்தான் கூறல் கடன்"                                                   - குறள் 638

என்ற குறட்பாவாழி நாம் அறிந்து கொள்ளலாம்.

                சீவக சிந்தாமணியில்சீவகனைக் கண்டுகொண்ட தாய் விசயைஅவனுக்குப் பலவாறு அரசியல் அறிவுரைகளைக் கூறுகிறாள்அதில் அமைச்சர்கள் பற்றி அவள் கூறும் விடயங்கள் கவனிக்கத்தக்கதுஅமைச்சர்கள் பல அறநூல்களைக் கற்றவர்கள்அவர்களை ஒரு மன்னன் கண்போல பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறாள்மந்திரி சுற்றம் மற்றும் தந்திரிகளின் சுற்றம் ஆகிய இரண்டையும் இன்னவர் இதற்குரியவர் என அறிந்து அவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்வதே ஒரு வெற்றி நோக்குடைய ஆட்சியாளரின் சூழ்ச்சியாக இருக்கமுடியும் என்கிறாள் விசயைஇதனை,

          கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ்

             சுற்றம் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோ  

            கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே"                  சீவக.சிந். 1921

என்ற வரிகள் மூலம் நாம் தெளிந்து கொள்ளலாம்எனவேஓர் ஆட்சியாளனுக்கு அமைச்சர்கள் என்போர்மேற்கூரையைத் தாங்கி பிடித்திருக்கும் தூண்களைப் போல இன்றியமையாதவர்கள் என்பதை நாம் உணரலாம்.

 

வரி வசூலிப்பு 

வரி வசூலிப்பின் ஏற்றயிறக்கம்

அரசியலில் பொருளாதாரம் தொடர்பான வழிமுறைகளும் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளனஒரு மன்னன் எவ்வளவு வரி வசூலிக்கலாம்அது எந்த எல்லையோடு நிற்க வேண்டும்அப்படி நிற்கவில்லை என்றால் மக்களுக்கு என்னென்ன துன்பம் நேரும் என அனைத்தும் நமது வரலாற்றுக் களஞ்சியத்தில் மொழியப்பட்டுள்ளதுசேரர்களின் வரி வசூலிப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளதுஅவர்கள்தென்புலத்தார்தெய்வம்விருந்துசுற்றத்தார்இல்லறத்தான்அரசு என மக்களிடம் மன்னன் ஆறில் ஒரு பங்கு வரியை வாங்கினான் என்பதை,

 " படுவது உண்டு பகல்ஆற்றி 

              இனிதுஉருண்டை சுடர்நேமி 

             முழுது ஆண்டோர் வழிகாவல!"                                                 - புறம். 17(6-7)

என்ற இந்த வரிகள் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறார் குறுங்கோழியூர் கிழார்.

             சீவக சிந்தாமணியிலும் இதே வரி வசூலிப்பு முறை, தாய் விசயையால் சீவகனுக்குப் போதிக்கப்படுகிறது.  அரசியல் முறையால் ஆறில் ஒரு பங்கு வரியை வரையறுத்து அப்பொருளைச் சேர்க்கச் சொல்வதாக அந்தத் தாயின் போதனை அமைந்துள்ளதுஇதை,

 " நீதி யாலறுத் தந்நிதி யூட்டுத"   -   சீவக 1920

என்ற வரிகள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

          ஒரு வேளை வரி வசூலிப்புமுறை தவறி நடைபெறுமானால்அது எந்த அளவு மக்களைப் பாதிக்கும் என்பதையும் புறப்பாட்டு நமக்கு எடுத்துரைக்கிறதுயானை புகுந்த விளைநிலம் எப்படி நிலை திரிந்து அழியுமோஅதுபோல் அறிவுடைய அரசன் வரி வாங்கும் முறை அறிந்து வாங்காவிட்டால்அவன் நாட்டில் செல்வம் பெருகாதுஅரசனும் உயரமாட்டான் என்கிறார் பிசிராந்தையார்இச்செய்தியை,

 " அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே 

           கோடி யாத்துநாடுபெரிது தந்தும்

           ....    ....   ....   ....

            யானை புக்க புலம்போலத் 

           தானும் உண்ணான்உலகமும் கெடுமே                    - புறம் 184(5-6,10-11)

என்ற இந்த வரிகள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். எனவேவரிவசூலிப்பு முறையும் அரசியலில் முக்கிய இடம் பெறுகிறது என்பது தெரியவருகிறது.

                

வறுமை ஒழிப்பு

வறுமையால் கையேந்தும் சிறுவன்


   ஓர்  அரசனால் முயன்றும் முடியாதவற்றுள் ஒன்று வறுமை ஒழிப்புஎனினும்  சங்க காலத்து அரசர்கள் அதையும் ஒழித்த வல்லமை வாய்ந்தவர்களாய் இருந்துள்ளனர்ஒரு நல்ல ஆட்சியாளரின் நாடு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி இருந்தது என்பதைப் புறநானூறு நமக்குக் கூறுகிறதுஅங்குள்ள மக்கள் எந்தத் தீயை மட்டும் அறிய வேண்டும் என்றால்சூரியனின் கதிர்களையும்சோறு சமைக்க மூட்டிய அடிப்பின் தீயையும் அதன் வெம்மையையும் மட்டும் அறிந்தவர்களாக  இருப்பர்மாறாக வறுமையால் வரும் வெம்மையை அறியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதை,

            " சோறுபடுக்குந் தீயோடு 

              செஞ்ஞாயிற்று தெறல்  அல்லது 

              பிறிதுதெறல்  அறியார் "                                                            -  புறம். 20(7-9)

என்ற இந்த வரிகள் மூலம் நம் தெரிந்து கொள்ளலாம்.  

             இதைப்போல் ஓர் ஆட்சியாளரின் தலையாய கடமையாகச் சான்றோரால் முன்வைக்கப்படும் ஒன்று '  எனக்கு ஏதேனும் ஈகஎன ஒருவன் கேட்காதபடிநாட்டை முன்னேற்றிஇரந்து கேட்போரின் இல்லாமையை இல்லாமல் ஆக்குவதே எனக் கூறலாம்.  உலகில் இரவலர்களின் இல்லாமையைத் தீர்க்கும் வன்மையுடையவன் எனப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவன் போற்றப்படுகிறான்.

          " இன்மை தீர்த்தல் வன்மை யானே "                                       - புறம்.3(26)

என்ற இரும்பிடர்த் தலையாரின் வரிகள் மூலம் நாம் கண்டுகொள்ளலாம்.

        வள்ளுவரும் இவ்வகை இரந்து உயிர் வாழ்வோரை எண்ணி மனம் கசிவதைச் சில குறட்பாவாழி நாம் அறிந்துகொள்ளலாம்இப்படி இவர்களை இரந்து வாழும்படி செய்தவன் தானும் இரப்போனாய்ப் பிறந்து அலைந்து திரிந்து பிச்சை கிடைக்காமல் அழிந்து போகட்டும் எனச் சபிக்குமளவு அவரையும் இந்த அளவிற்கு மக்களின் வறுமை நிலை மனதளவில் பாதித்துள்ளதைக் காணமுடிகிறது.

        "  இரந்தும் உயிர்வாழ்தல்  வேண்டிற் பரந்து 

           கெடுக உலகியற்றி யான் "                                                              - குறள் 1062

என்ற இந்தக் குறளில்வள்ளுவரின் கோபக்குரல் ஒலிப்பதில் வியப்பொன்றும் இல்லைஏழைஇரப்போன்பிச்சைக்காரர் என இது போன்ற சொற்களும் கூட மொழிகளில் இடம் பெறாத அளவிற்கு நல்லாட்சி செய்யும் மன்னனே அல்லது ஆட்சியாளனேமக்கள் போற்றும் நல்லாட்சியாளன் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை

               இன்றைய தேதியில் ஆட்சியாளருக்கு மட்டுமல்லாது அனைவர்க்கும் தேவைப்படும் அறிவுரைகளாகவே இவை விளங்குகின்றன. ஒரு நாட்டை ஆளும்  மன்னனுக்கு எந்த அளவிற்கு அரசியல் அறிவு இருக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு அந்நாட்டு மக்களுக்கும் அரசியல் குறித்த விழிப்புணர்வு அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. மரம் பட்டுப்போனாலும் தன்னை வளர்த்த மரத்தைத் தாங்கிப் பிடித்திடும் ஆலமர விழுதைப்போல், நமது நாட்டை புரிந்துகொள்ளவும், பாதுகாத்துக்கொள்ளவும், புறநானூறு இதுமட்டுமன்றி இன்னும் நிறைய அறிவுரைகளைத் தனது பாடலின் எதோ ஒரு மூலையில் பொதிந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. பழந்தமிழரின் வீரத்தோடு கலந்த சொற்களில் சிலவே இந்தக் கட்டுரையின் பொருண்மையாக அமைந்துள்ளது. எனவே, இக்கால நடைமுறைகளுக்கும் ஏற்றதாகவே புறப்பாட்டின் அறிவுரைகள் அமைந்துள்ளன என்பதை இந்தக் கட்டுரை வழி நாம் அறிந்து கொள்ளலாம்.  

அடிக்குறிப்புகள் 

 

. . பாலையன் - புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை- 14, 2018.

 நாமக்கல் கவிஞர் - திருக்குறள் மூலமும் உரையும், சுதர்சன் பதிப்பகம், சென்னை - 600017.

புலியூர்க்கேசிகன் - நற்றிணை, பாரிநிலையம், சென்னை - 600001, 2001.

திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி, சாரதா பதிப்பகம், சென்னை - 14, 2013.

இரா. நாகசாமி - தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு, 1969.

மது..விமலானந்தம் - தமிழ் இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி .நகர், சென்னை - 17.

ஞா. மாணிக்கவாசகன், உமா பதிப்பகம், 171(18), பவளகாரத் தெரு, மண்ணடி, சென்னை - 600001, 2016.

Name

கட்டுரை,13,கவிதை,45,சிறுகதை,2,
ltr
item
காவியத்தமிழ்: அரசு நிர்வாகம் பற்றி புறம் கூறும் கருத்துகள்
அரசு நிர்வாகம் பற்றி புறம் கூறும் கருத்துகள்
அரசு நிர்வாகத்திற்கு உதவக்கூடிய புறநானூறு கூறும் செய்திகள் பற்றிய கட்டுரை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFpVc-ydjYEd1CabtByLr_GUChLpyYu9MNat20b-mb91OwzOz-bA-mtlOJhyphenhyphenCIJWQ_q0xySuX4JRQNceOnLF0J4l3kQsOj6U2ct1I0t0W_FhYfl5NwXxGFlxLxP1H4lLPv3UTpOQSXMqczmmABbpZEN7md-5iruv0ERnXqVRWkGQtEGCLXcsUjHEBHnC4w/w640-h360/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFpVc-ydjYEd1CabtByLr_GUChLpyYu9MNat20b-mb91OwzOz-bA-mtlOJhyphenhyphenCIJWQ_q0xySuX4JRQNceOnLF0J4l3kQsOj6U2ct1I0t0W_FhYfl5NwXxGFlxLxP1H4lLPv3UTpOQSXMqczmmABbpZEN7md-5iruv0ERnXqVRWkGQtEGCLXcsUjHEBHnC4w/s72-w640-c-h360/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81.png
காவியத்தமிழ்
https://www.kaaviyatamil.com/2024/11/arasu-nirvagam-pattri-puram-koorum-karuthugal.html
https://www.kaaviyatamil.com/
https://www.kaaviyatamil.com/
https://www.kaaviyatamil.com/2024/11/arasu-nirvagam-pattri-puram-koorum-karuthugal.html
true
6069112678454011421
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL மேலும் படிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content