கண்ணீர் பற்றிய கவிதை
மண்ணாய் போனேன் என்று
சொன்னாய் ,எனினும்
மண்ணுக்குள் போவதெல்லாம்
மண்ணாய் போவதில்லை என்றேன்!
எப்படி? என்றாய்,
இதோ என்னைப் பார்!
என் கிளையில் ஊஞ்சலாடும்
கனிகள் தேனாய் பூத்துள்ளது,
உன்னுள் புதைந்த விதையினால்!
என்றேன்,
நீ சிரித்தாய்!
எவ்வகை கர்ணனும் , தானங்கள்
ஏன்? என்றேன்,
கொடுத்த பொருளெல்லாம்
ஜுவாலையால் விழுங்கி,
சாம்பலாய் உமிழ்வேன்
சங்கடப்படுகிறார்கள் என்றாய்!
நீயும் ஒருவகை
ஆச்சரியம் தான்
எப்படி? என்றாய்,
இருளையும் கூட நீ,
ஜுவாலையால் விழுங்குவாய்,
தடையம் எதற்கென
சாம்பலையும் விழுங்குவாய் என்றேன்!
நீ சிரித்தாய்!
எவரும் என்னை நேசிப்பதில்லை
என்றாய்!
ஏன்? என்றேன்!
எவரும் என் கை பற்றுவதில்லை,
அசையாய் எங்கும் அரவணைப்பு இல்லை,
அதனால் சொல்கிறேன்
எவரும் என்னை
நேசிப்பதில்லை ,என்றாய்!
அன்பின் பொருள் என்ன
சாதலின் சாதல் என்றாய்!
நீ இல்லையேல் அனைவரும்
இங்கு இறந்துபடுவர் என்றேன்!
நீ சிரித்தாய்!
வெறுமையின் நிறம்
நீலம் என்றார்கள்!
கதிரவன் உன்
திலகமாய் ஜொலிக்கிறானே ? என்றேன்,
என் துரோகியே அவன் தான் என்றாய்!
ஏன்? என்றேன்!
எனது நட்சத்திரப்பூக்களை,
அவனின்
தினம் தினம்
மூடுவிழா நடத்துகிறான்! என்றாய்,
அவன் துரோகி அல்ல,
கருணையாளன் தான் என்றேன்,
எப்படி? என்றாய்!
உன் நட்சத்திர மின்னல்கள்
பகலில் வானை ஆக்கிரமித்தால்,
கண்கள் கூசி
பூலோக வாசிகள்,நமது
இயற்கை
தேவையில்லாமல்
இம்சை செய்வர் என்றேன்!
நீ சிரித்தாய்!
என்னை
எண்ணுகிறார்கள் என்றாய்!
இல்லை என்றேன்!
எப்படி? என்றாய்!
நீர் எந்த இடத்தில் இருந்தாலும்
உயிர் சுமப்பீர் என்றேன்!
நிரூபி என்றாய்!
இதோ,
என் கண்ணில்
வழிந்தோடும் நீரில்
துள்ளியோடுகிறது மீன்கள் என்றேன்!
ஏன் ஆழுகிறாய்?