வீட்டுச்சிறையில் இருக்கும் அனைவரின் மனநிலை பற்றிய கவிதை
என்னை வெளிவிடுங்கள் !
நான் பல சுகங்களால்
அனுபவப்பட வேண்டும் .
கதவைத் திறந்துவிடுங்கள் !
ஞாயிற்றின் வெப்பம்
என்மேல் படர வேண்டும் .
மழைத்துளிகளை நான்
ஸ்பரிசிக்க வேண்டும் !
மண்வாசனையை முகர்ந்து நான்
மூச்சுப்பிடிக்க வேண்டும் !
மரயிலைகளின் நரம்புகளைப்போல்
ஓவியம் வரைய வேண்டும் !
மலர்களின் இதழ்களைப்போல்
கவிதை வடிக்க வேண்டும் !
மகரந்தத் தேனுக்கு நான்
பதில் பாடல் பாடவேண்டும் !
மங்கும்முன் வண்ணங்களை நான்
என்மேல்
மணிக்குயில் ஓசையோடு மலையில்
என்னிரைச்சல் எதிரொலிக்கவேண்டும் !
என்னை வெளிவிடுங்கள் !
கதவைத் திறந்துவிடுங்கள் !