பிளேமிங் ஜூன் என்ற ஓவியம் தூண்டிய கவிதை
செவ்வானம் எங்கும்
கடல் மேனியில் வழிந்தோடும்
தங்கத் திரவங்கள்!
பச்சை இலைகளில்
மாலைக் கதிரின் பிம்பங்கள்!
சகலமும் தீயில் எரிந்து
சாம்பலாகும் இரவு!
எல்லாம் என் சுவரின்
பூச்சுகளில் வைரமாய் மின்னியது!
என் கண்ணையும் கூசி
கலக்கமும் செய்தது!
கண்ணை மூடவும் அந்த
வெளிச்சம் அனுமதித்தது!
கண்ணை விழித்தாலும்
பார்வை எங்கோ இழுத்துச் செல்கிறது!
ஆரஞ்சு நிற உடை
என்னை தீ எரிக்க
ஜுவாலையாய் தீண்டும்
எனது சிரத்தில்
அலைபாய்ந்த குழம்பி நிறக்
கூந்தல், என்னைப் புதைத்து
சொல்லாமலே என் கண்மணியுள்ளே
கரைந்துபோகும் பனித்துளிகள்!
கொல்லாமல் வதைத்து, என்னருகே
விஷம் தெளிக்கும்
என் நினைவிலே
அரளி மலர் பாவிகளே!!
என் கனவிலே, தொண்டையுள்
செருமும் சாபங்களே!
நீங்கள் என் கண்முன்னே பூத்து
காலத்தை எதிர்நோக்கி
கதகதப்பாய் துயிலுகிறேன்!
கனவிலாவது என் நிம்மதி
கெடுக்காமல் இருப்பீரே!!