முதியவர்கள் பற்றிய கவிதை
இயன்று முடிந்த அனைத்தின்
ஞாபகங்களும்,
முயன்று இயலாமல்
போனவற்றின்
ஏக்கங்களும் சங்கமித்த
சுருக்கங்கள் இவை!
ஓயாமல் பல தாண்டவங்கள்
புரிந்தும்,
பயணித்த நடைகள்
சங்கமித்த கடுமை
விதைத்து
முளைவிட்ட செடி பார்த்தும்,
அதுவே உயர
வளர்ந்தபின் வானம் பார்த்தும்,
விழுது விட்டு விருட்சம்
கண்டதும் பார்த்த
சாட்சிகள் சங்கமித்தது தான்
இந்த மங்கிய பார்வை!
ஆயுள் ரேகை
முழுதும்
விளையாடியும்,
முற்றுப் புள்ளியை மட்டும்
ஒத்திவைக்கும் சிந்தையும்
சங்கமித்தது
சேர்த்து வைத்த
அனுபவங்கள் அனைத்தும்
வெள்ளை அடித்து,
இனி பெறப்போகும்
சங்கமம் இந்த நரைத்த முடி!
இருக்கின்ற உறவுகளின்
எண்ணிக்கையும்,
இனியும் தங்க முடியாத
உறவுகளின்
காட்டும் சங்கமங்கள்
இவர்கள்,
முற்றும் தெளிந்த
முனிவர் சிந்தையும்,
முற்றும் அறியா
பிள்ளை மனமும்,
சங்கமித்த உயிர்களே
முற்றும் முதிர்ந்த
முதியோர்!