சிறு சிறு நிகழ்வுகள் அல்லது சுகங்கள் மானுடத்திற்கு வாய்க்காமல் போவது பற்றிய கவிதை
வானம் கொடுத்த பெருமழையில்
தானம் வாங்கும் வறியோனாய்
நீரில் நனைந்த இலைமேனி
பெருமரத்தில், ஓயாமல் சொட்டும்
ஒருதுளி நீர்போல்
பெறுவோமா நாம்
பெருவாழ்வில் சுகம் ?
மார்கழித் திங்கள் தன்னில்
பார் வானம் அருளே போல்
புவி மயிராம் பசும்புல்லில்
பொய்யாமொழிக்கு உவமையாய் நின்ற
நுனி தங்கிய பனித்துளிபோல்
பெறுவோமா நாம்
பெருவாழ்வில் சுகம் ?
வெண்மையும் மஞ்சளும் சேர்ந்த திரவமாய்
வெண்ணிற ஓட்டினுள் அதனை இருப்பாக்கி
இரவும் பகலும் பெடை கோழி கதகதப்பில்
துறவு கொண்ட பெருமகானைப் போல்
ஓடுடைத்து வெளிவரும்
ஒற்றைப் பிஞ்சுயிர்போல்
பெறுவோமா நாம்
பெருவாழ்வில் சுகம் ?