தற்கொலைக்குச் சாட்சியான மின்விசிறி பற்றிய கவிதை
நிலவொளியும் தேய்ந்த அந்த நள்ளிரவில் ,
வாகன இரைச்சல்களும் அடங்கிய அந்தவீதியில் ,
அறையின் மின்விளக்கு சற்று மங்கியபடி எரிய ,
மின்சார உயிர்போய் மெதுவாகச் சுழன்ற
விசிறியின் நிழல் ,
அதோ! அந்த மேசையில் இருந்து
ஏறத்தாழத் தனது உதிரமான மையை
நுனியில் பிடித்திருந்த பேனாவைக்கொண்டு
என்ன எழுதுகிறாள் அவள் ?
எனச் சுழன்று சுழன்று பார்த்தது ,
தலைச்சுற்றி மயக்கமடைந்த விசிறி ,
காலையில் கண்விழித்து !
இரவில் அது கொண்ட கேள்விக்கு இப்போது ,
இதோ! படுக்கை மேல் இருக்கும்
அவளது பிணம் பதில் கூறுகிறது .....