கடவுள் நம் மனதில் தான் இருக்கிறார் அவரை வெளியே தேட அவசியம் இல்லை என்று கூறி கடவுளைப் புகழும் கவிதை
உன்
துயில் கொள்ளவோ ,
பாற்கடல் போல்
அலைபாயும்
என்
கண்ணா !
உன் நிறம் கூட
என்னிடம் கண்ணாமூச்சி
கண்டு
என் கண் படைத்தாய்?
கண்ணா!
உன்
கவின்மலரும், சுண்ணங்களும்
காற்றில் மிதந்தோட,
அதை நுகர்ந்து
மோட்சம் பெறவோ, என்
சுவாச வாசலைப் படைத்தாய்?
கண்ணா!
உன் திருநாமத்தையும்,
ஓய்வு அறியாமல்
மீண்டும் பாடவோ,
கண்ணா!
உனக்காகவே
பூவுலக பூக்களை,
உனக்கான மாலையாய்
தொடுத்திடவோ,
கை படைத்தாய், அதில்
விரல் படைத்தாய்?
கண்ணா!
உன் பெயர்கள் ஒவ்வொன்றும்
நான் சுவாசிக்க உள் சென்று
எங்கும் அவைகள்
எதிரொலிக்க,
நரம்பு தோறும் பாய்ந்தோட
உதிரம் படைத்தாய், அது
சுமக்கும் தேகம் படைத்தாய்?
கண்ணா!
கேட்டதை விட
அதிகம் கொடுக்கும் நீ,
என்னுள்ளே குடியிருக்கும்
சூட்சமம் அறியா
பேதை நான்,
உன்னை வெளியே
திரிந்து அலைந்து தேடவோ,
கால் படைத்தாய், அதில்
கண்ணா!