இறகை விதியெழுத அழைக்கும் கவிதை
இறகே! என்னை எழுத வா!
எத்துணையோ பேருக்கு
எழுதியிருக்கிறாய்
அவரவர் கதாபாத்திரத்தை !
என்னையும் இறகே,
எழுதவா இங்கே !
உனக்குத் தேவையான
மையை, என் உடலில்
இழைந்த உதிரத்தை உறிஞ்சி
ஒரு கண்ணாடி கோப்பையுள்
ஏந்தி வைக்கிறேன்,
என்னையும் இறகே ,
எழுதவா இங்கே !
வருவதற்கு நீ
வழிதவறாமல் இருக்க
உன் கண்ணின்
ஒளியை நான்
பிரதிபலிக்கிறேன்!
என்னையும் இறகே,
எழுதவா இங்கே!
பாதையில் முட்கள்
பதம்பார்க்காமல் இருக்க ,
எனது கூந்தலாகிய
கம்பளத்தை விரித்து
உன்
என்னையும் இறகே !
எழுதவா இங்கே!
போன முறை என்விதியை
முடித்து உடைந்தது
இம்முறை
தொடங்கி வைக்க
எழுதவா இறகே !
ஏங்குகிறேன் இங்கே !