இராதாவின் காத்திருப்பைப் பற்றிய கவிதை
சூரியவொளி சுட்டெரித்து
துகளாய் அலையும்
சாம்பல் இரவினிலே ,
அன்றைய நாள்
இருட்டை அள்ளி
முடிந்தவளாய் ,
இராதா!!
நட்சத்திரங்களின்
தடாகத் தாமரைகள்
தங்களின் தாபங்களை
இதழ் போர்த்தி
மூடிக்கொண்ட போதும்,
உருப்பெற்று உயிரணுக்களில்
ஊஞ்சலாடும் விஷயம்
இராதா!!
பெண்மை பல்லக்கில்
செவ்வான நாணங்கள்
பயணிக்கப் போவதையா
பிரகாசிக்கிறது உன் சிரிப்பு ?
நீ இருப்பதாலே, பூமியில்
தனக்கு வேலையில்லை
என்ற கவலையில்
நிலவு கம்பளம்
போட்டு இறங்காமல்,
பிம்பத்தை மட்டும்
நீரில் நனைத்துக் கொண்டிருக்கிறதே !
இராதா!
நீ செய்யும் பாவத்திற்காக
உனக்கு வைகுண்டத்தில்
தண்டனை வைப்பில்
உள்ளதென நிலவு
நீ
உனது வரவை
காற்றின் ஈரத்தாலேயே
கண்ணன் அறிவான்!
அவனின் வரவை
நீ அறிவது
என்பதைக் கேட்டதும்
வார்த்தையை நெகிழவிடா
விடையைத் தருவதுபோல்
நீ
இராதா!!
எல்லாமும் தூங்கினாலும்
துயில இயலாதவற்றையும்
துயில வைக்கவும்,
குழலாடி மணம் பரப்ப,
எங்கோ ஒரு குழலோசை
கேட்டதும் நீ மட்டும்
தூங்காமல்
இராதா!!
இது கண்ணன்
வரும் சமிஞ்ஞையா ?