இரவில், நிலவின் ஒளி கடலலைகளில் பிரதிபலிப்பதைச் சார்ந்த கவிதை.
மேகங்கள் ஏதுமில்லா
மெல்லிரவு வேலையிலே ,
யாகங்கள்
வான்மீன் நெரிசலிலே ,
சோகங்கள் சிலசுமந்த
வெண்ணிலவு ஒன்று
நாவாய் ஊர்வலம்
நின்றுநடத்தும் நடுக்கடலில்
போவார் இல்லாத
பாய்மரப் படகருகே ,
தெப்ப வளைவு கொண்டு ,விண்மீன்களின்
வெப்பம் தாங்காமல் விலகி மிரண்டொடி ,
வானில் ஏற்றம் இரக்கம் யாவும் கடந்து
கானில் மரயிலைகள் எள்ளி நகையாட ,
சற்றும் எதிர்பாராமல் சறுக்கி விழுந்திட ,
முற்றும் சிதறிப்போய் ,கண்ணாடிபோல்
முற்றும் சிதறிப்போய் ,கண்ணாடியில்
ஒவ்வோர் துகளிலும் தெரியும் பிம்பம்போல்
ஒவ்வோர் அலையிலும் தெரியும்
ஒற்றை மதிக்கதிரின் மிச்சம் ,
முன்போர் இரவில்
தேன்நிலா வந்ததன்
இன்னோர் எச்சம் ,
விடிகாலை மஞ்சள்
விழும்வரை எச்சம்!