சீதா இராமன் கல்யாணம் பற்றிய கவிதை
அனைவரும் அங்கே தான்
திரண்டு இருந்தனர் !
வந்தவருக்கு
வந்தனம் வைத்தனர்,
அத்தனை லாவண்யங்களும்
அங்கே வந்திருந்து
காவியங்கள் பாடின!
ரோஜா இதழ்களும்
அன்றொரு நாள்
பனித்துளிகள் தம்மை
அது அந்த ஜனக
மந்திரி குமாரிக்காக!
ஆயிரமாயிரம்
அவளை
ஐஸ்வரியங்களை அள்ளி
அந்த அரங்கம்
அவளின் பார்வை
மலரின் மதுவைத் திருடி
அவளின் சாயம்
செந்தாமரை
சிந்தாமல் பருகி,
வெண்டாமரை ஆக்கிய
விஷயம் யாரும்
சண்முகப்பிரியா அவளது
காலில் ஒலிக்க,
இடையிலே கொண்டும்,
நடையில் கொண்டு
என்றுமே வெற்றி தரும்
ஜெய லட்சுமியாய்
அரங்கத்தில் புகுந்தாள்!
நட்சத்திரங்கள் பூக்களாய்
ஆசிர்வதிக்க நிகழ்ந்தது
ஒரு வைஷ்ணவ வைபோகம்!
சீதையை இராமன்
கரங்களையும் பற்ற வைத்தது,
அவளின் கற்பிற்கான
ஜுவாலையையும் பற்ற வைத்தது !