இரவில் தூக்கமின்றி இருக்கும் பெண் தனது தனிமையை கூறும் கவிதை
இருளோடு நான் !
நிழலும் எனக்கு
அருளும் காண் !
இருளில் நான் !
இருக்கும் நாள் ,
ஒன்றல்ல இரண்டல்ல ,
ஓராயிரம் காண்!
இரவில் நான் !
ஜன்னலோரம் நான் !
கண்ணிமைகள் கதவடைத்தும்
தூக்கமில்லை காண் !
ஜன்னலோரம் நான் !
வெண்ணிலவோடு நான் !
எண்ணங்கள் பரிமாற்றம்
எண்ணிலில்லை காண் !
இரவில் நான் !
சுவரோடு நான் !
என்னை அடைகாக்கும்
நத்தை ஓடு காண் !
சுவரோடு நான் !
சாய்ந்தபடி நான் !
வாயில் மறந்தாயோ ?என
நகைத்தது காண் !
இரவில் நான் !
கண்ணாடியில் நான் !
என்னை மீண்டும்
சந்தித்தேன் காண் !
கண்ணாடியில் நான் !
சிறுகனவுடன் நான் !
கணநேரம் என்கனவு
கலைந்தது காண் !
இரவில் நான் !
இருளோடு நான் !
இப்படியே எந்நாளும்
கரைத்திடுமே காண் !
இரவில் நான் !
இருளோடு நான் !