ஊக்குவிக்கும் கவிதை
வீறுகொண்டு எழு மனமே !
வீழ்ந்து கிடந்தது போதும் மனமே !
ஞாயிறு உதயம் கிழக்கில் மனமே!
மேற்கை வெறித்தது போதும் மனமே!
சோலை மலர்கள் பூத்தன மனமே!
சோர்ந்து கிடந்தது போதும் மனமே !
மண் முட்டிய விதைகள் துளிர்ந்தது மனமே!
நமக்கும் மறுவாழ்வு மலர்ந்திடும் மனமே !
நெஞ்சில் வெப்பம் நிற்கக்கூடாது என்மனமே !
கதிரவன் ஒருநாளும் குளிர்ந்ததில்லை என்மனமே!
இருளிலும் நடக்கத் தயங்காதே என்மனமே!
விளக்கொளியும் சிலதூரம் வெளிச்சம்தரும் என்மனமே!
பழங்கதைகள் பேசுவதில் பயனில்லை என்மனமே!
பழைமையை அடைகாத்துப் பேணுவாய் என்மனமே !
திறமைகளின் பெருமை இடத்திலில்லை என்மனமே !
மனைக்கிணற்றிலும் காண்பாய் தேன்சுவைநீரை என்மனமே!
நேரான மரங்கள் நிமிர்ந்து வெட்டுப்படும் என்மனமே!
வளைந்து உயிர்வாழ்தல் சாக்காடாம் என்மனமே!
உன்னைச் சுற்றியோர் வட்டமிடுவாய் என்மனமே!
உன்போல் அனைவரின் உணர்வை மதிப்பாய் என்மனமே!