அலைகள் பற்றிய சிறு கற்பனை கவிதை
அலைகள் ஏன்
என்றுமே அலைந்து
கொண்டே இருக்கிறது?
இந்த அலைகளால்
இயற்கை அன்னை
என்ன சொல்ல வருகிறாள்?
மனித உடலின்
உயிர்ப்பே இயக்கம்தான்!
அதுபோல கடலின்
உயிர்ப்பே அலைகள் தானோ?
அதற்கு நீலநிறம்.
எனினும் அலைகளின்
அலைச்சலுக்கு அர்த்தமில்லாமல்
போய்விடாதே? என்று கேட்டேன்
ஒரு கவியிடம்.
அலைகள் நெய்கிறது என்றார் ,
எப்படி என்றேன்.
கவித்துவமான பதில் கிடைத்தது!
நீலமான பாவு நாலை
முன்னும் பின்னும் செல்லும்
கட்டைகளைக் கொண்டு
நெய்யும் பட்டு போல ,
இங்கே அலைகள்
முன்னும் பின்னும் நடந்து
நெய்கிறதாம் ஒரு