அவரவருக்கு இருக்கும் தனிப்பட்ட சிந்தனைகளில் திகழும் கற்பனை உலகத்தைப் பற்றிய கவிதை
இங்கு
என்னுடைய கிரீடம்
தங்கத்தாலோ, வைரத்தாலோ
மணப்பது அல்ல,
அது விலைமதிப்பற்ற
மலர்களால் மின்னும்.
இங்கு
நான் மட்டும்
இருப்பேன்,
எனக்கான இசையும் எனக்குள்ளே
மௌனமாய் சில்லிடும்.
இங்கு
எனக்கென்று என்னைத் தேடி
மழையும், வெயிலும்,
மின்னலும், புயலும்,
என் வீட்டினுள்ளே வந்து
மாறி மாறி புன்னகைக்கும்.
இங்கு
உயிர்பெற்று உலாவிக்கொண்டிருக்கும்
மானுடர் எல்லாம்
நான் வரைந்து
வைத்த சித்திரங்கள்.
இங்கு
தனிமைகள்
துள்ளி விளையாடி
இங்கு
நான் விரும்பும்
சாத்தியமில்லா நிகழ்வெல்லாம்,
திரையில்லா மேடையில்,
உருவில்லா மனிதர்களால்
அரங்கேற்றப்படும்.
இங்கு
நான் நினைப்பது
மட்டுமே நடக்கும்,
நான்
மட்டுமே இருப்பர்.
ஏனெனில், இது
என் உலகம் .
உங்களது போல்
என்
ஆன்மாவின் இருப்பிடம்,
அதுவே எனது விருப்பிடம்.
இங்கு
நான் தான்