கையால் ஆகும் செயலை நம்ப சொல்லும் கவிதை
தலையாட்டும் தஞ்சையின்
தண்ணீர் ஊற்றி
பக்குவப் படுத்தி,
பானையை, சமைக்கும்
குயவன் தனது கையைதான் நம்புகிறான்!
ஊரெல்லாம் சுற்றி
அலைந்து திரிந்தபின்,
ஓர்
புராணங்கள் கதை சொல்லும்
ஓவியமாய் தீட்டும் எனது,
இராஜா ரவி வர்மனும்,
கையைதான் நம்புகிறான்!
வானம் பார்த்தபின் தன்பூமியை,
பண்படுத்தி நாற்றுகளை நட்டு
நீர் பாய்ச்சி பயிராக்கி ஆளாக்கி
ஆயிரமாயிரம் இரத்தினக்கதிர்களை
அறுவடை செய்து உலகை
ஆற்றுப்படுத்தும் உழவனும்
தன்கையை தான் நம்புகிறான்!
உலகின் மிகப்பெரிய அறப்போராட்டத்தை
நடத்தி, தலைநிமிர்ந்து இருக்கும் நம்நாடும்
பல்லாயிரம் கைகளின்
சங்கிலி கோர்ப்பு தான்!
மழைத்துளிகள் அனைத்தையும்
பிடித்துவிட்டதாய் புன்னகைக்கும்
மழலையும் கூட
தன் கையைதான் நம்புகிறது!
மரத்திற்கு மரம் தாவி,
தன்கையைதான் நம்புகிறது!
உயிர்களை எடுத்து வளர்க்கவும்
கொடுத்து உதவவும்,
அத்தனை வளங்களையும் இங்கு
அள்ளித் தந்த இறைவனும்
மானிடர் கையைதான் நம்புகிறான்!
ஏன் ?
அனுமனே ஒரு கையால்
சஞ்சீவி சுமந்தவன் தானே!