போர்கள் ,யுத்தங்கள் இல்லா உலகை வேண்டும் கவிதை
மனது கனக்கிறது !
எரிந்து துடிக்கிறது !
மனதிற்கு அமைதி வேண்டும் !
பருத்திப் பஞ்சிற்குள்
பனிக்காற்றை நிரப்பி ,
படுத்து உறங்கிட
அமைதி வேண்டும் !
மேகத் துகள்களை
மெதுவாய் சேமித்த
மெத்தையில் அமர
அமைதி வேண்டும் !
கதிரவன் குளித்த நீரில்
குதித்து ,
சிறகு
புறாவினை இரசிக்க
அமைதி வேண்டும் !
வெண்ணிலா
மண்ணில் எங்கும்
காணும் இடமெல்லாம்
அணை உடைக்கும் பெருக்கெடுக்க
அமைதி வேண்டும்!
மோட்சம் பெற்று
வெண்மை கூசிடும்
தும்பை நனைய ,
அமைதி வேண்டும் !
பூத்திடும் ரோஜாக்களில் ,
புன்னகைக்கும் பனித்துளிகள்
சூரியன் வந்தபின்
அமைதி வேண்டும் !
வெண்ணிறத் தாளின்
வறுமை போக்கிட ,
எழுத்துக்களை ஏர்பூட்டி
உழவு செய்ய
அமைதி வேண்டும் !