கண்ணாடி பற்றிய கவிதை
கல்லிற்கும் கண்ணாடிக்கும்
நெடுங்கால மனஸ்தாபம்!
கண்ணாடி, பிம்பங்களைக்
காட்டிய குற்றத்திற்காய்
வீசப்பட்டன அன்று
விமர்சனக் கற்கள்!
உடைந்தபின் காட்டியது
ஓராயிரம் கற்களை!
உடைத்த கல்லைப் பழி
வாங்கும் நடவடிக்கை
என
அதன் பின்
ஆதரவாய் எவர் அதைத்
தொட்டாலும்
கையையும் பதம்
பார்த்துவிடும்!
கல்லோ என்ற
சந்தேகத்தைத் தீர்த்துவிடும்!