கடலோரம் ஆசுவாசிக்கும் நிலை பற்றிய கவிதை
வானின் நெற்றித்திலகம்
வழிந்து கரைந்தோட ,
வங்கக் கடலில்
அலை சறுக்கிய காற்று ,
ஈரத்துணியை உதறுவதுபோல்
என்மேல் சில்லிட
என்ன காரணம் ?என்னை
வரவேற்கிறதா ? வசைபாடுகிறதா ?
பூமியில் பிறந்த
பாதங்கள் யாவும் ,
அலையின் சீலை வந்து
அழிக்கும் என்று தெரிந்தும் ,
ஈரமணலில் தங்கள்
நிலையில்லா பயணத்தை
நிறைவேற்ற என்ன காரணம் ?
சுவடுகள் அழியும் சுகம் கண்டதாலா ?
சுவடுகள் பதிப்பதில் சுகம் கண்டதாலா ?
அலைகடலில்
அயராது மீன்பிடித்து ,
அலைகளில் ஏற்றங்கள்
துயரங்கள்
மூக்குடைந்து
இற்றுப்போய்ப் பயனற்றுப்போய்
கரையொதுங்கிய பிணம்போல்
இதற்கு என்ன காரணம் ?
வாழ்வின் சுகமே தத்தளிப்பா ?
உழைப்பின் அடையாளம் ஒதுக்கப்படலா ?