கண்கள் பற்றிய கவிதை
மனக்கண்ணிற்கு இவைகள்
வெளிச்சம் கொடுக்கும்!
அறிவுக்கண்ணின் அகல்விளக்கைச்
சிலநேரம் இது
அணைத்து விடும்!
அகிலத்தை ஆட்டிப்படைக்கும்
சிறு எறும்பான மனிதனின்,
ஆறடியை ஆட்டிப்படைக்கும்
இரு கடுகுகள் இவைகள் !
கற்பனைகள் பல கோர்க்கும்!
அண்டம் அனைத்தும்
ஆசையின் திறவுகோலே இதுதான்,
ஆண்டவன் படைப்பிலும்
அதிசயம் இதுதான்!
அண்ட இரகசியங்களின்
ஆனால் அதை வெளியே தேடித்
திரிவதும் இவை தான்!
சில நேரம் இரகசியங்கள்
நீராய் கசிவதுண்டு, அது
காற்றோடு கரைவதும் உண்டு!
வெள்ளை உருண்டை கடலில்,
பாய்மரம் இல்லாமல் அலைமோதும்
படகுகள் இவை !
இவைகள் கவிழ்ந்து இருந்தாலும்
ஒருபோதும் மூழ்குவதில்லை,
மூழ்கடிக்கவே செய்கின்றன!
உதிரம் கூட தீண்டாத
வெளிச்சம் தரும் வண்ணங்களுடன்
ஒருபோதும் நீராடாமல் இருந்ததில்லை!
ஒளியை உணர வைக்கும்
இரு ஆச்சரியங்கள் இவை !
சில நேரங்களில்
கண்கள் இருந்தால் பார்வை
இருப்பதில்லை,
பார்வை இருந்தும் கண்கள்
இருப்பதில்லை!