மனச் சிறையிலிருந்து விடுபட இரண்டு வழிமுறைகள் கூறும் கவிதை
கத்தரி தன்
சிகை வெட்டினாலும்,
வளர மறப்பதில்லை
வண்ணச் சிறகு.
வளர்ந்தாலும்
வெட்டுவேன்
சபதம் செய்தாலும்,
வெட்டி வெட்டி
கத்தரிக்கோல் ஒருநாள்
வெட்ட முடியாமல்
நம்மை வெளியே விடும்.
எத்தனை
ஆயிரம் நரம்பினில்
அடைத்து
வைத்தாலும்,
எவரும் பலவந்தமாய்
மீட்டினாலும், முற்பட்டாலும்,
வெளிவர மறுக்கும்
இசை,
அதற்கென
செய்து வைத்த
விரலைக்
கொண்டவர்
மீட்டும் போது,
துள்ளி அதிர்ந்து,
காற்றின்
பிரசவித்து
தானும் அர்த்தப்படும்!
விடுதலை
சற்று சிக்கலானது தான்!
ஒன்று,
சிறைக் கம்பிகளுடன்
தாண்டி வளர்ந்து
விடுவித்துக்
கொள்ள வேண்டும்!
மற்றொன்று,
நமக்கான காலம்
நம்மை
வாழ்வளிக்கும்.