இராமாயணத்தில் சீதையை மீட்கும் சூடாமணி போன்று தற்கால பெண்களை மீட்பது கல்வியே என்பதன் நிலை கூறும் கவிதை
மண்ணில் துகளாகி ,
மிதிலை மன்னின் மகளாகி,
ஆற்றாத ஜனகன்
பிறந்த போதும்
மண்ணை
பிரவேசித்தாய் நீ !
உன்
கணவனுக்காய் காத்துவந்த,
எவன் ஏந்துகிறானோ,
அவன் தான் வென்றவன் ,
இவள் தன் கணவன்
என்றான் உன் ஜனகன் !
அதை எடுத்து
அனைவரின் கண்ணிலும்
வீண் தூற்றலை வில்லாய் உடைத்தான் !
அப்போது நீ ,
அனைவரின் முன்னும்
ஆற்றாத நாணம் கொண்டு
அரங்கத்தில் பிரவேசித்தாய் !
அங்கொரு நகரானது ,
உன் மண வைபோகம்
வையத்தில் பிரகாசிக்க ,
சகல பொருட்களும்
பொன்னால் மின்னும்போது ,
பொன்னே கண் கூசிட
அயோத்தியில் தான் நீ
அழகாய்
சதை மட்டும் கொடுக்கா
சிற்றன்னை மனமாற்றம் ,
குற்றமில்லா கணவனை
வனவாசம் அனுப்பிய போதும் ,
கூடவே சென்று
இரு
இரக்கம் இல்லா
ஊசிமுனை முட்கள்
கிழித்தும், புதுப்பூ
புன்னகையோடு
காட்டிலும் பிரவேசித்தாய் நீ !
ஏனோ , மாய மானை வேண்டினாய் !
தேடிய கணவன் வாராமையால் ,
கொழுநன் கோடு
வருகை தந்தான்
விருந்தாளி இராவணன் ,
கவர்ந்த போதும்
குடிசையுடனே ஆகாயத்திலும்
பிரவேசித்தாய் நீ !
எல்லாம் முடிந்தது என
இமையோர் பெருமூச்சுவிட
அயோத்தி உன்னை
அரவணைத்து மீண்டும்
அரங்கேற்றியது ,
கணவனோ
சந்தேக ரதம் ஏற்றினான் ,
நீ,
அக்னியிலும் பிரவேசித்தாய் !
சுந்தர
பிரவேசிக்க வில்லை நீ ,
உன் சூடாமணித்
துணையாய்
குடிசையைத் தாண்டாமல்
கொளுவிருந்தாய் !
உன்னை
மீட்டது நீ தந்த சூடாமணி ,
உன்னை அக்னி
காத்தது உன் நேர்மை .
இன்றும் பல சமயம்
சூடாமணியாய்
காட்டி எங்களை நாங்களே
மீட்டுக் கொள்வோம்!
உன்னைப் போன்ற சீதா பிராட்டிகள்
உனக்காவது சூடாமணிக்குப்பின்
சூழ்ந்தது
எங்களுக்கோ சூடாமணி
சூடும் வரை
தினம் தினம் ,
அதிலும் சிலவை
அக்னி பிரவேசங்கள் !