இனி வரும் காலம் இளைஞர்களால் கட்டமைக்கப்படும் என்பதை கூறியும் அவர்களை அழைத்தும் பாடுகிறது இந்தக் கவிதை
நாளைய இளைஞனே !
இந்தியா உலகரங்கில்
இன்றியமையாது இருக்கவேண்டும் !
அதற்காக இயன்றவரை
நீ இயந்திரமாக வேண்டும் !
எதற்காகவும் நில்லாமல்
நெடுந்தூரம் ஓடவேண்டும் !
காட்டுப் புலிகள்
கட்டுத்தறியில் இருக்கலாமா?
பாட்டுக் குயில்கள்
புல்லாங்குழலை யாசிக்கலாமா?
எல்லாமே உன்னிடத்தில்
இருக்கின்றது எண்ணிப்பார் !
சொல்லாமல் ஜெயிக்கும்
விரிசல் விட்ட
ஆலமரம் வளரும் !
உதிர்ந்து போன
இலைகளும் ,வசந்தத்தில்
ஊஞ்சலாட மீண்டும்
பூமரம் சேரும் !
உலகமே நில்லாமல்
சுழன்று கொண்டிருக்க ,
உதிரமும் நில்லாமல்
உயிர்
இளைப்பாறுவதென்ன நியாயம் ?
உனது வியர்வை
பயிர் சமைக்க வா !
உனது உதிரம் பாய்ச்சி
பல
உனது தோள்களில்
பல
உனது
பலதொழில்நுட்பம் ஆள வா!
இறங்கா மணிமுடியை ஏந்திட வா !
வாகை சூடட்டும் ,
உனது தாழ்ந்த கழுத்து
தலை நிமிரட்டும் ,
சங்கிலியாய் கோர்க்கட்டும்!
உங்களையே ஒளியாய்
நம்பியது தேசம் !
உங்கள் உருவங்கள்
அணையா சோதியாய்
அந்தரத்தில் ஒளியை
அள்ளி வீசட்டும் !
நீங்கள் கண்ணிலும்
ஒளிக்க வேண்டும்!
எங்கள் காதிலும்
ஒலிக்க வேண்டும்!
இனி வரும் காலம் ,
இளைஞர் காலம் !!!